search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆலய தேர் பவனி"

    • பரலோக அன்னை ஆலய தேர் பவனி நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூர் பெரியநாயகிபுரம் கிராமத்தில் பரலோக அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தேர் பவனி நடந்தது. பங்கு தந்தை அருள்ஜோதி மைக்கேல் தலைமை வகித்தார். கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தினமும் அன்னைக்கு ஜெப நிகழ்ச்சி, திருப்பலி நடந்தது. நிறைவு நாளில் தேர் பவனி நடந்தது.

    திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வானவேடிக்கையும், தாரைதம்பட்டங்கள் முழங்க புனித உத்திரியமாதா அன்னையின் மின்னொளி தேர் பவனி நடைபெற்றது.

    நத்தம்:

    திண்டுக்கல் மறைமாவட்டம் நத்தம் தாலுகா செந்துறையில் கத்தோலிக்க கிறஸ்தவ பங்கு ஆலயம் உள்ளது.கிளைப்பங்கு நல்லபிச்சன்பட்டியில் உள்ள புனித உத்திரியமாதா ஆலய திருவிழா கடந்த 14 -ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் நவநாள் திருப்பலி நடைபெற்றது.

    2 ம்நாள் நிகழ்ச்சியில் புனித உத்திரியமாதா வேண்டுதல், பொங்கல் வைத்தனர். அன்று இரவு புனித உத்திரியமாதா வேண்டுதல் தேர்பவனியும் வலம் வந்தது. 3-ம்நாள் மாலை பொதுபொங்கல், இரவு விருதுநகர் பள்ளி தாளாளர் லாரன்ஸ் மற்றும் பங்குத்தந்தையர்கள் இணைந்து திருவிழா ஆடம்பர பாடல் கூட்டுத் திருப்பலியை நடத்தினார்கள்.அன்று இரவு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வானவேடிக்கையும்,தாரைதம்பட்டங்கள் முழங்க புனித உத்திரியமாதா அன்னையின் மின்னொளி தேர் பவனி மற்றும் புனிதர்களின் 5 சப்பர தேர் பவனிகள் நடைபெற்றது.

    அனைவருக்கும் அன்பின் விருந்து நடைபெற்றது.தொடர்ந்து அன்று இரவு இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மாலை புனிதர்களின் தேர்பவனியும், திப்பலியும்,கொடியிறக்கத்துடன் திருவிழா  நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை செந்துறை பங்குத்தந்தையர்கள் இன்னாசிமுத்து, மைக்கேல், பிரிட்டோ மற்றும் நல்லபிச்சன்பட்டி, கிளைப்பங்கு கிறிஸ்துவ இறைமக்கள் செய்திருந்தனர்.

    • புனித அன்னம்மாள் ஆலய தேர் பவனி நடைபெற்றது.
    • கொடியேற்றத்துடன் தொடங்கியது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி புனித அன்னம்மாள் ஆலய ஆண்டு விழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதன்பின்னர் மைக்கேல் பட்டி பங்குத்தந்தை அடைக்கலசாமி திருப்பலி செய்து திருத்தேரை மந்திரித்தார். தேரில் அன்னம்மாள் சொரூபத்தை வைத்து பவனி நடைபெற்றது. நேற்று காலை சிறப்பு திருப்பலியோடு ஆண்டு பெருவிழா நிறைவு பெற்றது. விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • புனித வியாகுல மாதா ஆலய தேர் பவனி நடைபெற்றது.
    • தேர் பவனியுடன் கொடியிறக்கம் நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே அரசடிபட்டியில் புனித வியாகுல மாதா ஆலயம் உள்ளது. இக்கோவிலில் ஆலய திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி முக்கியஸ்தர்களால் தினந்தோறும், புனித வியாகுல மாதா திருஉருவ கொடிறே்று கூட்டுப்பாடல் திருப்பலி மற்றும் கொடி சுற்றுப்பவனியும் நடைபெற்று வந்தது.

    நவநாள் சிறப்புத்திருப்பலி நடைபெற்றது. அரசடிபட் அருட்திரு பங்குதந்தையர்கள் திருவிழா 9-ம் நாளான நேற்று முன்தினம் தேர்பவனி நடைபெற்றது. மாலையில் திருப்பலி மற்றும் தேர்ப்பவனியும் நடைபெற்றது. இதில் அரசடிபட்டி, பாத்திமா நகர், தவளைப்பள்ளம் சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து மாலை 3 மணிக்கு தேர்ப்பவனியும் கொடியிறக்கமும் நடைபெற்றது.


    ×